Monday, April 12, 2010

வாழ்க்கை பயணத்தில் நானும்...

நானும் என் வாழ்க்கை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்...

விரைவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன்....

Sunday, November 1, 2009

மனதில் தோன்றியவை...

கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய நடக்கின்றேன்! உன் காலடி சுவடுகளை தேடி...

நிஜங்களை விட உன் நினைவுகளோடு வாழ்வது கூட சுகமாய் தான் இருக்கிறது...

உன்னை மறக்க நினைத்தாலும் முடியவில்லை- நீ விட்டு சென்ற உன் நினைவுகள் என் மனதோடு இருப்பதால்!!!

என் நினைவோடு வந்து கனவாக மறைந்த உன்னை காற்றோடு தேடி அலைகிறேன்...

கதறி அழும் என் கண்களில் இனி கண்ணீர் கூட மிச்சமில்லை... எல்லாம் உன் காலடியுள் சமர்ப்பணம்...

நட்பின் வலி

உனக்கும் எனக்குமான இடைவெளிகள் சில மைல்கல் தான்... ஆனால் எட்டாத உயரத்தில் நீயும் தொட முடியாத விரக்தியில் என் நட்பும்...

காதலில் தோற்றால் மட்டும் தான் தோல்வியா என்ன? நட்பும் ஒரு பரீட்சை தான்! வென்றால் வாழ்க்கை முழுக்க சந்தோசம் - தோற்றால் ஒவ்வொரு நொடியும் வலி...

வலி நிறைந்த மனது சிந்திக்க கூட மறந்துதான் போகிறது... தொலைந்து போன என் நட்பே... வருவாயா?

விழிகளும் இமைக்க மறந்து என்னோடு துணையாய் உன்னை எண்ணி...

Wednesday, August 5, 2009

கைக்கிளை காதல்

என் கனவுகளின் காவியத் தலைவனே!
நித்திரை இன்றி தவிக்கும்
என் இரவுகளில்
நித்தமும் உன் நினைவு தான்!
அழித்து விட நினைக்கிறேன் - உன்
நினைவுகளையல்ல!
உன்னால் நேசிக்கப்படாத
என் நிழல்(நிஜங்)களை!!!

- கவிதை காதலி